முகத்தில் உள்ள கருமையை போக்க உதவும் கசாயம்


முகத்தில் உள்ள கருமை நிறமும் உடலின் நிறமும் மாற வேண்டுமா?
இந்த கசாயத்தை தினமும் குடித்து வந்தால் மாற்றத்தை கண்கூடாக காணலாம்.
ஆவாரம்பூ நன்னாரி வேர் கசாயம்


தேவையான பொருட்கள் 



நன்னாரி வேர்.    -5 கிராம்

ஆவாரம்பூ.             - 10 கிராம்

ஆலம் பட்டை.        - 5 கிராம்


செய்முறை


முதலில் நன்னாரி வேர், ஆவாரம்பூ, ஆலம் பட்டை இவை மூன்றையும் எடுத்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 500மி.லி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.நன்றாக கொதிக்க வைத்து 100மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி வடிகட்டி கொள்ளுங்கள்.


பயன்கள்


காய்ச்சிய கசாயத்தை தினமும் காலை மாலை என இரு வேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் முகத்தில் படர்ந்த கருமை நிறமும் உடலின் நிறமும் மாறும்.


தூங்கும் முன்


வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) மூன்றையும் சேர்த்து தினமும் தூங்க செல்வதற்கு முன் வாயில் போட்டு மென்று தின்று முழுக்கவும்.


குறிப்பு


அனைத்து காய்கறிகளையும் கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
.பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தி வளமுடன் வாழ்க.

Comments

Popular posts from this blog

வாஸ்துப்படி படுக்கை அறை அமைக்கும் முறை

தன்னம்பிக்கை காலைப் பொழுது பொன்மொழிகள்